கெத்துக்காக வீடியோ பதிவிட்டு, வனத்துறையிடம் சிக்கிய பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்..!
கெத்துக்காக வீடியோ பதிவிட்டு, வனத்துறையிடம் சிக்கிய பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்..!
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரவீனா டாண்டன். இவர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காப்புக்காட்டில் சுற்றுலா சென்றுள்ளார். வனத்துறையினரின் ஜீப்பில் அனுமதி பெற்று சுற்றுலா பயணம் தொடர்ந்துள்ளது.
அப்போது, இவர்களின் வழித்தடத்தில் புலி ஒன்று வந்ததாக தெரியவருகிறது. அது உறுமிக்கொண்டே வந்த நிலையில், அதனை வீடியோ எடுத்த நடிகை ரவீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவை கண்ட பலரும் அவர்களின் வாகனம் புலிக்கு அருகே சென்றதா? என கேள்வி எழுப்பிய நிலையில், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ரவீனா, தாங்கள் செல்லும் வழித்தடத்தில் புலி உறுமிக்கொண்டே சென்றது என்று தெரிவித்து இருக்கிறார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362