×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்.! கோபமாக பேட்டியளித்த ஜெனிலியா..

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்.! கோவமாக பேட்டியளித்த ஜெனிலியா..

Advertisement

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெனிலியா. இவர் 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நந்தி விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள ஜெனிலியா, முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முகின் மகனும், பாலிவுட் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ரியான் என்ற மகனும், ரஹீல் என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டார் ஜெனிலியா. அவரது கணவர் கேட்டுக்கொண்டதால் தான் சினிமாவை விட்டு விலகினார் என்ற செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் ஜெனிலியா, "என்னால் குடும்பம், குழந்தைகள் என்று இரண்டு உலகங்களில் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாது. என் குழந்தைகளுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன். நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன்" என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#genelia #actress #Kollywood #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story