×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுவிட்சர்லாந்தில் நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!. திடுக்கிடும் தகவல்கள்!.

சுவிட்சர்லாந்தில் நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்!. திடுக்கிடும் தகவல்கள்!.

Advertisement

சுவிட்சர்லாந்தில் கடந்த 2004-ல் இசை நிகழ்ச்சி நடந்தபோது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியுள்ளார். அந்த சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதை வைரமுத்து அவரின் குற்றசாட்டை மறுத்த நிலையில், தன் மீது தவறிருந்தால் வழக்கு தொடரலாம் என கூறினார்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சிக்கு சின்மயி உட்பட எல்லோரையும் அழைத்து சென்ற இனியவன் என்பவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.அவர் கூறுகையில், சின்மயி கூறுவது முற்றிலும் பொய்யானது, அங்கு இது போல நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

 ஏனென்றால் சின்மயியும், வைரமுத்துவும் தனித்தனியான இடத்தில் தான் தங்கியிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் தனித்தனியாக சென்றுவிட்டோம்.

அவ்வாறு இருக்கும்பொழுது  சின்மயி ஏன் இதுபோல பேசுகிறார் என தெரியவில்லை. அவர் கூறுவது பெரும் அதிர்ச்சியளித்தது. கடந்த சில நாட்களாகவே பல ஊடகங்களில் பெரிதாக பேசப்படும் செய்தி வைரமுத்து-சின்மயி அவர்களை பற்றி தான்.

ஆனால் சம்பவத்துக்கு பின்னர் வைரமுத்து வீட்டுக்கு சென்று சின்மயி திருமண அழைப்பிதழ் கொடுத்தார், அதே போல வைரமுத்து பிறந்தநாளுக்கு அவர் அம்மா வாழ்த்தினார். மேலும்  நீங்களும், ஏ.ஆர் ரகுமானும் சின்மயிக்கு கிடைத்த வரப்பிரசாதம் என சின்மயி தாய் வைரமுத்துவிடம் கூறினார்.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவன் நான் தான், எல்லோரையும் அங்கு நான் தான் அழைத்து சென்றேன். சின்மயி இப்படி சொல்வது அதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார். அங்கு அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chinmayi #vairamuthu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story