×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாரிசு படம் பார்ப்பதற்கு அஜித் ரசிகர்களுக்கு... வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த; விஜய் ரசிகர்கள்..!

வாரிசு படம் பார்ப்பதற்கு அஜித் ரசிகர்களுக்கு... வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த; விஜய் ரசிகர்கள்..!

Advertisement

பட்டுக்கோட்டையில், வெற்றிலை பாக்கு, பூ, பழம், வைத்து அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய் இருவரும் தங்களது படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தனர். படங்களின் ரிலீஸ் தேதி வெளியிடப்படாமலேயே இருந்தது. 

இரண்டு படங்களின் டிரைலர்களிலும் அறிவிக்கப்படாத ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 11-ஆம் தேதி  நாளை அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசும் வெளியாகின்றன. படம் வெளியாக இன்னும் சிலமணி நேரங்களே உள்ளன. 

இந்நிலையில் இரண்டு படங்களின் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எட்டு வருடங்கள் கழித்து ஒரே நாளில் அஜித், விஜய் திரைப்படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த நிலையில், பட்டுக்கோட்டையில் விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பழம், பாக்கு வைத்து அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அனைவருகும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #pattukottai #cinema #varisu Movi #Vijay Fans Invited Ajiths fan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story