பயங்கர மனஅழுத்தத்தில் இருந்த ரசிகை! குக் வித் கோமாளி அந்த ஒரு எபிசோடில் ஏற்பட்ட மாற்றம்!!
பயங்கர மனஅழுத்தத்தில் இருந்த ரசிகை! குக் வித் கோமாளி அந்த ஒரு எபிசோடில் ஏற்பட்ட மாற்றம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அதனை ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவ்வாறு கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் குரேஷி. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் உருக்கமாக எழுதிய கடிதத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், அண்ணா இந்த விஷயத்தை நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும். இதற்கு நீங்கள் ரிப்ளே பண்ணுவீங்களானு கூட எனக்கு தெரியாது. நான் சில நாட்களான மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். எனக்கு என்ன பண்றதுனே தெரியவில்லை. அந்த நேரத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்தேன்.
அதில், நீங்க ஸ்ருதிகா மாதிரியே பேசிய டையலாக் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இந்த எபிசோடையே நான் கிட்டத்தட்ட 100முறை பார்த்துவிட்டேன் இன்னும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். மிகவும் நன்றி அண்ணா. சீக்கிரம் உங்களை நேரில் சந்திக்க வேண்டும். என மிகவும் எமோஷனலாக தெரிவித்துள்ளார். அந்த பதிவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த குரேஷி எல்லா பெருமையும் ஸ்ருதிகாவையே சேரும் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362