×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனது சொத்துக்களை ஏமாற்றி பறித்துக்கொண்டார் சரத்பாபு! பிரபல நடிகை புகார்!

Famous actor sarathbabu wife complaint against to her husband

Advertisement

1977 ஆம் ஆண்டு வெளியான 'பட்டின பிரவேசம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த முள்ளும் மலரும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிங்கர் சரத் பாபு. அதன்பின்னர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.

1981 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகை ரமா பிரபுவை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்க வில்லை. 1988 ஆம் ஆண்டு, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சரத் பாபு தன்னை ஏமாற்றி, தனது சொத்துக்களை பறித்துக்கொண்டதாக அவரது மனைவி ரமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள சரத் பாபு, அவருக்கு கொடுத்த என்னுடைய வீட்டை தான் நான் திரும்ப எடுத்து கொண்டேன் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Sarath babu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story