×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரசிகர்கள் அதிர்ச்சி.!! சமந்தாவா இப்படி செய்தார்?? மனம் திறந்து மன்னிப்பு கேட்டார் சமந்தா!!

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸில் தான் நடித்த கதாபாத்திரம் யாரையேனும் புண்படுத்தி

Advertisement

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸில் தான் நடித்த கதாபாத்திரம் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

தி பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியானது. இந்த தொடரில் ஈழத் தமிழர்களை தீவிரவாதிகளாக காட்சியளித்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக  சமந்தாவின் கதாபாத்திரத்திற்கும் அதிக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த தொடரை தடைசெய்யவேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

ஈழத் தமிழர்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடன் கூட்டணி அமைத்து, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் இந்த தொடரில் காண்பித்துள்ளதால், வரும் காலத்தில் ஈழத் தமிழர்கள் மீதான பார்வையை இந்த வெப் சீரிஸ் மாற்றிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொடருக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சமந்தா மன்னிப்பு கோரியுள்ளார். "நான் அதில் ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்ததாக அவர்கள் எண்ணினால் உங்கள் மனதை புண்படுத்தியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன், ஏனெனில் இது நான் வேண்டுமென்றே செய்யவில்லை. நான் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, நான் அவ்வாறு செய்திருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய கதாபாத்திரம் மோசமாக சித்தரிக்கப்பட்டது என்று சிலர் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எனவே உண்மையாக மன்னிப்பு கேட்கிறேன்." என்றுதெரிவித்துள்ளார்."

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Family man
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story