தேவதையை கண்டேன் சீரியலில் இந்த எபிசோட்டை பார்த்தால் உண்மை புரியும்! ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி!
Eshwar jayasri mahalakshmi

இன்று தமிழக மக்கள் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது ஈஸ்வர் மற்றும் மகாலட்சுமியின் கள்ளக்காதல் பற்றி தான். ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் ஈஸ்வர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதாவது தனது கணவர் மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையும் தொடர்பில் இருப்பதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டாதாகவும் புகார் செய்தார். இதனால் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார். ஆனால் தற்போது வெளியே வந்த ஈஸ்வர் ஜெயஸ்ரீ கூறுவது அனைத்து பெய் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதை குறித்து பேசிய ஜெயஸ்ரீ தான் கூறுவது அனைத்தும் உண்மை என கூறி பேட்டி கொடுத்துள்ளார். மேலும் அவர்களின் உறவை பற்றி சீரியல் செட்டில் உள்ள சக நடிகர்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தேவதையை கண்டேன் சீரியலில் 350 முதல் 355 வரை உள்ள எபிசோட்டை பார்த்தால் உண்மை புரியும். மேலும் தனது தோழிகள் தன்னிடம் மதியம் நடக்கும் சீரியலில் இவ்வளவு நெருக்கம் தேவையை என கேட்டதாகவும் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.