நண்பரை பார்க்க சென்ற வழியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! கண்ட கனவு எல்லாம் போச்சு! சென்னையில் பரபரப்பு.....
நண்பரை பார்க்க சென்ற வழியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! கண்ட கனவு எல்லாம் போச்சு! சென்னையில் பரபரப்பு.....
சென்னை மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி. அவர் போரூர் பகுதியில் தங்கி, சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், தனது நண்பர் அம்ருதீனுடன் தங்கியிருந்தார்.
நண்பரை சந்திக்க சென்ற போது நடந்த துயர சம்பவம்
அன்று, பெங்களூரில் வேலை செய்யும் கல்லூரி நண்பர் மடிப்பாக்கம் வந்திருந்ததால், அவரைச் சந்திக்க வசந்தகுமாரும், அம்ருதீனும் சென்றனர். பின்னர் இருவரும் அதிகாலை ராஜீவ் காந்தி சாலை வழியாக மத்திய கைலாஷ் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியதால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்....
வசந்தகுமார் உயிரிழப்பு உறுதி
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், வசந்தகுமார் ஏற்கனவே உயிரிழந்தார் எனத் தெரிவித்தனர். அவரது நண்பர் அம்ருதீன் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை ஆரம்பம்
சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணங்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டின் உள்ளே கதவை பூட்டி மாட்டிகொண்ட குழந்தை! கேஸ் அடுப்பில் குக்கர், கொதிக்கும் வெந்நீர்! 1 மணி நேரமாக தவித்த தாய்! திக் திக் நிமிடம்...