கன்னத்தில் அறை விட்டு அரிவாளுடன் பொங்கி எழுந்த ஜனனி! சக்திக்கு வேறொரு திருமணமா? கதையில் இப்படி ஒரு மாற்றமா! எதிர்நீச்சல் ப்ரோமோ..
எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரியின் நிலையை கண்டு ஜனனி கரிகாலனை கன்னத்தில் அறைந்து, அரிவாளுடன் கடும் எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறிய திரையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் எதிர்நீச்சல் தொடரில், கதைக்களம் தினந்தோறும் ஆச்சரிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. சமீபத்திய அத்தியாயத்தில், ஈஸ்வரியின் மோசமான நிலையை கண்டு ஜனனி, கரிகாலனை நேரில் சந்தித்து திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஈஸ்வரியின் அவலநிலை
குணசேகரனின் வன்முறையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஈஸ்வரியின் நிலை, வீட்டு பெண்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. நீதிக்காக போராட வேண்டும் என்ற உறுதியுடன் அவர்கள் முன் வந்துள்ளனர்.
ஜனனியின் திடீர் நடவடிக்கை
இந்த சூழ்நிலையில், கரிகாலனை வீட்டிற்கு அழைத்து வந்து, ஜனனி கன்னத்தில் அறைந்து, கையில் அரிவாளுடன் அனைவருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். அவரது இந்த செயலால், வீட்டினரும் பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: ஈஸ்வரியின் உடல்நிலை குறித்து டாக்டர் கூறிய உண்மை! மரண பயத்தில் குணசேகரன்! தந்தைக்கு எதிராக கிளம்பிய தர்ஷன், தர்ஷினி! எதிர்நீச்சல் ப்ரோமோ...
குணசேகரனின் புதிய திட்டம்
ஜனனியின் உறுதியான நடவடிக்கையை கண்டு கோபமடைந்த குணசேகரன், சக்தியை பிரித்து அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனால் தொடரின் அடுத்த பகுதிகளில் இன்னும் பல பரபரப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த சம்பவம், சன் டிவிவில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் பரபரப்பை மேலும் தூண்டி, ரசிகர்களை அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கச் செய்கிறது.