×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் நெஞ்சுவலி! உயிருக்கு போராடிய கடைசி நிமிடத்திலும் பயணிகளை காப்பாற்ற ஓட்டுநர் செய்த காரியம்!!

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் அடுத்த பூனைக்குத்திபட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருச்ச

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் அடுத்த பூனைக்குத்திபட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருச்சியில் இருந்து அன்னவாசலுக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஒட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், விராலிமலை அருகே பாத்திமா நகர் பகுதியில்
சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் ஆனந்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 


 இதில் சற்று நிலைதடுமாறிய ஆனந்த் எப்படியாவது பயணிகளை காப்பாற்ற வேண்டுமென சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலையை கடந்து நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த காலி நிலத்தில் நிறுத்தியுள்ளார். 

பின்னர் அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்த ஆனந்தை  மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்த் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தான் உயிரிழக்கும் நிலையிலும் பல உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர் ஆனந்தின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bus #heart attack #passengers
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story