இயக்குனர் சிகரம். கே. பாலச்சந்திரன் உதவி இயக்குனராக இருந்து, இன்று மிகப் பெரிய இயக்குநராக இருப்பவர் யார்? என்று தெரியுமா...?
director k.palasanthar - adjestent - director hari
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். அவர் அதிரடி மசாலா படங்கள் எடுப்பதில் தேர்ந்தவர். அந்த வரிசையில் உருவான படங்கள் தான் சாமி, கோவில், ஐயா, அருள், சிங்கம், வேங்கை உள்ளிட்ட படங்கள் இவ்வகைப் படங்களில் வேகம், விறுவிறுப்பு, நுணுக்கங்கள், பன்ச் டயலாக்குகள், அதிரடி சண்டை காட்சிகள் என அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் எடுப்பதானால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது .
அதனால் இவர் எடுக்கக்கூடிய படங்களில் இரண்டாம் பாகம் எண்ணிக்கை உடைய
படங்கள் தற்சமயம் அதிகரித்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சிங்கம் படத்திற்கு பிறகு சாமி- 2 ம் இணைந்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில் ஹரி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் போது நீங்கள் யாருடைய உதவி இயக்குனராக பணியாற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, நான் டைரக்டர் கே பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணிபுரிந்தேன் என்று கூறினார். இந்த உண்மை பலருக்கும் வியப்பூட்டும் வண்ணமாக இருந்தது ஏனென்றால் மிகப்பெரிய மசாலா படங்களின் இயக்குனர் கே. பாலச்சந்தரின் உதவி இயக்குனர் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது.