×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவால் முடங்கிய திரையுலகம்! மளிகை கடை துவங்கிய பிரபல இயக்குனர்!

Director anand starts provisional shop

Advertisement

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் சினிமா துறையே  முடங்கியுள்ளது. இதனால் திரைத்துறையினர் பலரும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சினிமாதுறையினர் பலரும் வேறு தொழில்களை செய்ய துவங்கியுள்ளனர். 

இந்நிலையில் தமிழ் சினிமாவில்  ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆனந்த், சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை ஒன்றை திறந்துள்ளார். 

இது குறித்து இயக்குனர் ஆனந்த் கூறுகையில், கொரோனாவால் 3 மாதங்களாக சினிமா வேலை எதுவும் நடைபெறவில்லை இந்நிலையில் ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என முடிவு செய்து, எனது நண்பர் ஒருவரின் இடத்தை வாடகைக்கு வாங்கி மளிகை கடை திறந்துள்ளேன். இங்கு குறைந்த விலைக்கு தரமான பொருட்களை விற்கிறேன். கடை முன்னால் விலைபட்டியல் போர்டும் வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு சேவையாகவும் இதனை நான் செய்கிறேன். ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பு தொடங்கியதும் நான் இயக்கிவந்த  துணிந்து செய் படவேலைகளை மீண்டும் துவங்கபடும். அப்பொழுதும் கடையில் வேறு ஒருவரை வேலைக்கு வைத்து கடையை நடத்துவேன் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Director anand #Proviosional shop
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story