×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரட்சிதாவை விவாகரத்து செய்துவிட்டேனா? அவங்களுக்குள் என்னதான் பிரச்சினை! உண்மையை உடைத்த கணவர் தினேஷ்!!

ரட்சிதாவை விவாகரத்து செய்துவிட்டேனா? என்னதான் பிரச்சினை! உண்மையை உடைத்த கணவர் தினேஷ்!!

Advertisement

 கடந்த 2011ம் ஆண்டு விஜய் டிவியில்
ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். 

நடிகை ரட்சிதா பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியார் தொடரில் நடித்தனர். ரட்சிதா தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக, விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரட்சிதா, சொல்ல மறந்த கதை சீரியல் கதாபாத்திரமும், எனது வாழ்க்கையும் ஒன்றுதான். தானும் தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ரட்சிதா கணவரை விவாகரத்து செய்து விட்டதாகவும், இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் தற்போது பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த தினேஷ், அனைவரது குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கும். அதே போலத்தான் எனக்கும், ரட்சிதாவுக்கும் இடையே சில பிரச்சினைகள் உள்ளது. எங்களுக்கு இடையேயான பிரிவு தற்காலிகமானதுதான். காலப்போக்கில் அது மாறிவிடும் என நம்புகிறேன். நானும், ரட்சிதாவும் இதுவரை சட்டப்படி பிரியவேண்டும்  என நினைத்ததில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dinesh #rakshita #divorce
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story