பாமக-விற்கு பணம் கொடுக்கும் அளவிற்கு திமுகவில் பணம் இல்லை.! தயாநிதி மாறன்.!
திமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சியில் திமுக எம்பி தயாநிதிமாறன் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அவரிடம் பாமக திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பாமக யாருடன் பேரம் பேசுகிறது என்ற தகவல் தனக்கு தெரியாது என்றார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை என தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போதே அதிமுகவிடம் 400 கோடி ரூபாய் பாமக பெற்றதாக பேசப்பட்டு வந்ததாகவும், இந்த முறையும் பாமக தரப்பில் பேரம்பேசப்படுவதாகவும் தெரிவித்தார். அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு திமுகவிடம் பணம் இல்லை கொள்கை மட்டும் தான் உள்ளது என தெரிவித்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362