அந்த சத்தம் தான் மாஸ்., ஒன்றரை வருடம் ஆகிருச்சு - நிகழ்ச்சியில் மெய்மறந்து உணர்ச்சிபொங்கிய தனுஷ்..!
அந்த சத்தம் தான் மாஸ்., ஒன்றரை வருடம் ஆகிருச்சு - நிகழ்ச்சியில் மெய்மறந்து உணர்ச்சிபொங்கிய தனுஷ்..!
நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களிடம் கூறிய வசனம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் ராஷிகண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து முன்பே இரண்டு பாடல்கள் லிரிக்கல் வீடியோவாக வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது நடிகர் தனுஷ் வெள்ளை வேஷ்டி சட்டையில் மாஸாக வருகை புரிந்தார்.
மேலும், நித்யா மேனன் மற்றும் ராஷிகண்ணா, நடிகர் பிரகாஷ், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசுவதற்காக நடிகர் தனுஷ் மேடை ஏறிய போது, ரசிகர்கள் "தலைவா தலைவா" என்று உரக்க சத்தமிடவே, அந்த சத்தத்தை மீறியும் தனுஷ் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, இந்த சத்தத்தை கேட்டு ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தார். அத்துடன் செஞ்சுருவேன் என சொல்லி ஸ்டைலாக நடைபோடுவது மட்டும் மாஸ் இல்ல என்றும், பெற்றோரை கடைசிவரையிலும் நன்றாக பார்த்துக்கொள்வது தான் மாஸ் எனக் கூறினார். இந்த வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362