×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன்னை அடித்து துன்புறுத்தியதாக கதறிய முதல் மனைவி! வனிதா, பீட்டர் பாலுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராக வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் இருவரையும் டிசம்பர் 23ம் தேதி ஆஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார், கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 3 மாதங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் தன்னை விவாகரத்து செய்யாத நிலையில், வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூறி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், காவல் ஆணையரிடமும் புகார் அளித்தார்.

ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் எலிசபெத் தற்போது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், எலிசபெத்திற்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தது என்பதற்கும், அந்த திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கும் ஆதாரங்கள் இருப்பதாக கூறி,  டிசம்பர் 23ம் தேதி வனிதா விஜயகுமாரும், பீட்டர்பாலும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanitha #Peter paul #court
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story