தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாயிடம் கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியடைந்த திரைத்துறை.?

தாயிடம் கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியடைந்த திரைத்துறை.?

Controversial news about actress Advertisement

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை அபர்ணா நாயர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

actress

33 வயதான அபர்ணா நாயர், மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அபர்ணா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தன் குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இவரது மரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாகவே அபர்ணா மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. தான் தனிமையில் இருப்பதை போல் உணர்வதாக தனது முகநூல் பக்கத்தில் அபர்ணா பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அபர்ணா இறப்பதற்கு முன்பு அவரது தாய்க்கு அழைத்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியிருக்கிறார். இதனால் அபர்ணா நாயர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress #Malayam #cinema #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story