×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமந்தாவின் கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு ஏற்பட்ட சிக்கல்! தடை செய்யக் கோரி வழக்கு! ஏன் தெரியுமா??

சமந்தாவின் கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு ஏற்பட்ட சிக்கல்! தடை செய்யக் கோரி வழக்கு! ஏன் தெரியுமா??

Advertisement

தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக பகத் பாசில் மற்றும் சுனில், அனுஷ்யா பரத்வாஜ், தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வனப்பகுதியில் செம்மரம் கடத்துபவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு  எடுக்கப்பட்ட இப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஒரு சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் வெளியானது. இப்பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் நடிகை சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில்  இப்பாடல் ஆண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இப்பாடலுக்கு தடை விதிக்கக்கோரி ஆந்திராவில் ஆடவர் சங்கத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pushpa #complaint #samantha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story