×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை ஜோதிகாவிற்கு வந்த பெரும் சோதனை!! தடை செய்யப்படுமா ராட்சசி!!

complain filled on jothika

Advertisement

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஜோதிகா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டமே உள்ளது. இந்நிலையில் ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு, தனது குழந்தைகளை பராமரித்து வளர்த்து வந்தார். 

இதனை தொடர்ந்து மீண்டும் சினிமாத்துறையில் களமிறங்கிய ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் வெளிவந்த 'ராட்சசி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இப்படத்தில் நடிகை ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். மேலும் அப்படத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல்  செல்போன் பார்ப்பது , கதைபுத்தங்கள் படிப்பது  போன்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்பது போன்ற சில வசனங்களும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன், ராட்சசி படத்தை தடை செய்து நடிகை ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jothika #ratsasi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story