விஜய் ரசிகர்களிடம் வம்பிழுத்த கருணாகரனின் நிலமை என்ன ஆனது தெரியுமா? அச்சச்சோ!
Comedy actor karunakaran twitter account suspended

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகிவரும் சர்க்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. சர்க்கார் திரைப்படத்தின் பாடல்கள் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதில் நடிகர் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவியது.
இந்நிலையில் நடிகர் விஜயின் பேச்சு குறித்து நகைச்சுவை நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். அதில் விஜய் ரசிகர்கள் ஆபாசமாக பேசுவதாகவும் நடிகர் விஜய் முதலில் அவரது ரசிகர்களை திருந்த சொல்லவேண்டும் என்று பதிவு செய்திருந்தார்.
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் கருணாகரன் மீது மிகவும் கோபமாக இருந்தார்கள், அதனால் டுவிட்டரில் விஜய் ரசிகர்களுக்கும் கருணாகரனுக்கும் சண்டை முற்றியது. ஒரு கட்டத்தில் நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினார். இதனால் கருணாகரன் விஜய் ரசிகர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் எந்த அறிவிப்பும் இன்றி நடிகர் கருணாகரன் ட்விட்டர் முடக்கப்பட்டுள்ளது, இதை அவர் டெலிட் செய்தாரா இல்லை யாராவது ரிப்போர்ட் செய்தார்களா என தெரியவில்லை.!