×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்திரத்தில் மதியை இழந்த போட்டியாளர்கள்: சரமாரி கேள்விகளுடன் கண்டித்த பிக்பாஸ்.. அவரையே கடுப்பாக்கிடீங்களா?..! 

ஆத்திரத்தில் மதியை இழந்த போட்டியாளர்கள்: சரமாரி கேள்விகளுடன் கண்டித்த பிக்பாஸ்.. அவரையே கடுப்பாக்கிடீங்களா?..! 

Advertisement

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது 07வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனில் தற்போது வரை 72 நாட்கள் நிறைவடைந்துள்ளன. 

டிசம்பர் 31ம் தேதியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெறவுள்ளதையடுத்து, போட்டி பரபரப்பை காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், நேற்று போட்டியாளர்கள் தங்களுக்குள் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டனர்.

பிக்பாஸ் வீட்டின் விதிகளை மீறியும், போட்டியின் விதிகளை மீறியும் செயல்பட்டு இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிக்பாஸ் இன்று போட்டியாளர்களை கண்டிக்கும் விதமாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதுதொடர்பான ப்ரோமோ வைரலாகி வருகிறது. 

போட்டியில் அனன்யா, அர்ச்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, நிக்சன், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், விசித்ரா, விக்ரம், விஜய் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். இவர்களில் கூல் சுரேஷ் இன்று வீட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார். 

இதனால் அவர் போட்டியில் தொடருவரா? என்பது தெரியவில்லை. இன்றைய நிகழ்ச்சியிலேயே அவை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg Boss S7 #tamil cinema #Vijay television #விஜய் தொலைக்காட்சி #பிக்பாஸ் தமிழ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story