பாலா மாமா..! ஆசையாக சுற்றிவளைத்த ரசிகைகள்! வெட்கத்தில் பிக்பாஸ் பாலாஜி செய்த காரியத்தை பார்த்தீர்களா!!
பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின்போது பாலாவை ரசிகர்கள் சுற்றிவளைத்து அன்பு மழைபொழிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு மிகவும் சுவாரசியமாக சென்ற நிலையில் ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் நடிகர் ஆரி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியாளரானார். மேலும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் ஒரு மாடல் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில தினங்களிலேயே தனது கருத்தை வெளிப்படையாக கூறி, அடிக்கடி அனைவரிடமும் சண்டைபோட்டு கோபப்பட்டு பெரும் விமர்சனங்களை சந்தித்தார். பின்னர் தனது குணத்தை மாற்றிக் கொண்டு மிகவும் பொறுமையாக அனைவரையும் சமாளித்து வந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் பாலா இறுதி நிகழ்ச்சி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்ட விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது பாலாவின் ரசிகைகள் அவரை சூழ்ந்து அன்பு மழையை பொழிந்துள்ளனர். மேலும் ஒருவர், பாலாவை தவிர வேறு கவிதை எழுத தெரியவில்லை எனவும் மற்றொரு பெண் பாலாவை மாமா எனவும் அழைத்து அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர். இதனை கண்ட சக போட்டியாளர்கள் அனைவரும் செம ஷாக்காகியுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362