×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டில் நுழைந்த முதல் நாளே கஸ்தூரிக்கு கிடைத்த ஸ்பெஷல் பவர் - அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!

Big boss season 3

Advertisement

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ளனர். தற்போது 10 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய முன் தினம் ஒருசில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது பிக்பாஸுக்கு மட்டுமே தெரியும்.

இவ்வாறு பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ள வீட்டில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பது போன்ற பரிசு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய பரிசுபெட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது அதன் உள்ளே நடிகை கஸ்தூரி அமர்ந்துள்ளார். இதைக்கண்ட பலரும் பெரும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அடைந்தனர். 

மேலும் நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியில் புதிய போட்டியாளராக செல்கிறாரா அல்லது விருந்திரனாரா வந்துள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. 

இந்நிலையில் சென்ற முதல் நாளே  கஸ்தூரிக்கு பிக்பாஸ் வீட்டில் ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் போட்டியாளர்களுக்கு பல தண்டனைகள் கொடுக்கிறார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#big boss3 #Kasturi #சூப்பர் power
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story