இந்த சீரியலால்தான் அதையெல்லாம் இழந்தேன்.. அதனால்தான்! வெளிப்படையாக போட்டுடைடைத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி!!
இந்த சீரியலால்தான் அதையெல்லாம் இழந்தேன்.. அதனால்தான்! வெளிப்படையாக போட்டுடைடைத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடனும், நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கண்மணி மனோகரன்.
இவர் கடந்த சில காலங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை குறித்து கண்மணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பாரதி கண்ணம்மா அஞ்சலி கதாபாத்திரத்தை நான் எப்போதுமே மிஸ் செய்கிறேன். எனக்கு கிடைத்த முதல் கதாபாத்திரம். அதன் வழியாகத்தான் நான் மக்கள் மத்தியில் நடிகையாக நன்கு பரிச்சயமானேன்.
இந்த வேடத்தில் நடிக்க ஆரம்பித்து மூன்று வருடங்களாகிறது. இந்த அஞ்சலி கேரக்டருக்காக நான் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன். இந்த நிலையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காகவே நான் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினேன் என கூறியுள்ளார். கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362