×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுத்த நடிகர் அரவிந்த்சாமி...! காரணம் என்ன?

balance-salary-amount

Advertisement

2014 வருடம் திரையுலகில் பதுங்கி பாய்ந்த அருமையான படம் தான் சதுரங்க வேட்டை. இந்த படத்தை திரைப்பட நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரித்து வெளியிட இருக்கிறார். 

சதுரங்க வேட்டை படம் நல்ல வெற்றி படமாக இருந்ததாலும் அதிக வசூல் கொடுத்தாலும் இந்த இரண்டாம் பாகம் எடுக்க மனோபாலா முடிவு செய்தார். இதன் அடிப்படையில் சதுரங்கவேட்டை இரண்டாம் பாகம் பிரபல நடிகர் அரவிந்த்சாமி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாகவும் திரிஷா நடித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், படம் ரிலீஸ்க்கு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மனோபாலாவின் மீது நடிகர் அரவிந்த்சாமி வழக்கு தொடுத்துள்ளார். நடிகர் அரவிந்த்சாமி, தயாரிப்பாளர் மனோபாலா தனக்கு இன்னும் சம்பள பாக்கி 1.79 கோடி இருப்பதாகவும் அதனை வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்... 

இதன் அடிப்படையில் நேற்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சுந்தர் விசாரித்தார். அவர் விசாரித்த வகையில் நடிகர் அரவிந்த்சாமி தரப்பில் படத்தை வெளியிடுவதில் எனக்கு எந்த வித ஆட்சியப்பனையும் இல்லை ஆனால் என்னுடைய சம்பள பாக்கியை தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்...

இதனை கேட்ட நீதிபதி சுந்தர் அவர்கள் அரவிந்த்சாமியின் பதிலை ஏற்றுக்கொண்டு வலக்கை வருகிற செப். 20 ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் விசாரணை அன்று மனோபாலாவின் தரப்பில் கூறப்படும் வாதத்தை பொறுத்து தான் தீர்ப்பு இருக்கும் என தெரிகிறது... தயாரிப்பாளர் மனோபாலாவின் வாதத்தை பொறுத்து தான் நடிகர் அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா? கிடைக்காதா என்று தெரியும்... 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story