ஆலமரம் சாய்ந்தது.. பிரபல இயக்குனர் அட்லீயின் வீட்டில் நேர்ந்த சோகம்! துயரத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்!!
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான திர
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான திரைப்படம் ராஜாராணி. இந்த படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர்.
இப்படத்தை தொடர்ந்து அட்லீ விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது அட்லியின் பெரியப்பா காலமாகியுள்ளார். இதுகுறித்து சோகத்துடன் அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், என் பெரியப்பா நீதிபதி சவுந்திர பாண்டியன் காலமானார். எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்துவிட்டது. அதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியவில்லை. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். பெரியப்பா நீங்கள் எப்போதும் எங்களது அரசர், எங்களின் முன் மாதிரி. உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம். நிம்மதியாக ஓய்வெடுங்கள் என கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362