நடிகையுடன் நெருக்கமான புகைப்படம்! அனிருத் கூறிய அடடே ஐடியா!
Aniruth talks about controverial speech

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களின் ஒருவர் அனிருத். தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமான அனிருத் தனது முதல் படத்திலையே உலக அளவில் புகழ் பெற்றார். 3 படத்தில் அவர் இசை அமைத்த கொலவெறி பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ளார் அனிருத். கடைசியாக சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்திற்கு இசை அமைத்தார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திற்கு இசை அமித்துள்ளார் அனிருத்.
இந்நிலையில் அனிருத்தின் வாழ்க்கை பயணம் பற்றி பேசுகையில் நான் சிறுவயது முதலே பல கஷ்டங்களை அனுபவித்துளேன், 3 படத்தில் கொலவெறி பாடலுக்கு இசை அமைக்கும்போது இதெல்லாம் ஒரு பாடலான என பிரபல எழுத்தாளர் கூறினார். நான் அப்போது எதுவம் கூறாமல் அமைதியாக இருந்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய சில புகைப்படங்கள் வெளியானது, அப்போதும் நான் அமைதி காத்தேன். இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து பேசினால் அதைப்பற்றி இன்னும் பெரிதாக பேசப்படும். இப்போது அமைதியாக இருந்தால் முடிந்துவிடும் என்று பேசியுள்ளார்.