×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காலையில் இருந்து ஈவ்னிங் வரை இதுதான் வேலை..! பயங்கரமா திட்டுவாங்க.! ஆனந்தம் சீரியல் கொடூர வில்லியாக நடித்த பிருந்தா தாஸின் தற்போதைய நிலை..!

Anandham serial brindha doss interview

Advertisement

கடந்த  2003-ம் வருஷம் தொடங்கி 2009 ஏறத்தாழ ஐந்தரை ஆண்டுகளுக்கு மேல் சன் டீவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஓன்று ஆனந்தம். நடிகை சுகன்யா நாயகியாக இந்த தொடரில் நடித்திருந்தார். தொடரில் வில்லியாக அபிராமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் பிருந்தா தாஸ்.

தற்போது இவர் என்ன செய்கிறார்? இவரது சமீபத்திய பேட்டி பற்றி பாப்போம் வாங்க. ஆனந்தம் தொடர் கிட்டத்தட்ட அஞ்சரை வருஷப் பயணம். சைலன்ட் வில்லியா நடிச்சிருப்பேன். போகப்போக என் கேரக்டரைப் பார்த்து ஆச்சர்யம் வந்ததது.

எங்கே போனாலும், அபிராமி னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. என் நிஜ பெயரையே மறந்துட்டாங்க. அந்த சீரியல் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது. அதில் வொர்க் பண்ணினது, மறக்கமுடியாத காலகட்டம்.

தற்போது எந்த தொடரிலும் நடிக்கவில்லை. நடிக்க வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு, பெரிசா நான் எதையும் ஏத்துக்கிறதில்லை. மார்னிங் டு ஈவ்னிங் வரை ஆபீஸ் வொர்க். அப்புறம், குடும்பப் பொறுப்புகள் எனப் போயிட்டிருக்கேன். நல்ல கதையாக வந்தால் நடிக்கும் ஆசையும் இருக்கு. குறுகிய காலத்துக்குள் முடியுற மாதிரி இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sun tv #Brindha doss #Anandham
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story