ஊரடங்கில் ஒரு நடிகையுடன் தனியாக இருக்க விரும்பும் அநேகன் பட நடிகை! என்ன காரணம் தெரியுமா?
Amrya wants to stay with deepika padukone

தமிழில் அநேகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அம்ரியா தஸ்துர் லாக்டவுனில் நடிகை தீபிக படுகோனுடன் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அம்ரியா தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
பிறந்தநாளை முன்னிட்டு இவர் ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஊரடங்கு சமயத்தில் யாருடன் தங்க விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் நடிகை தீபிக படுகோனுடன் தங்க விருப்பமாக உள்ளதாக தெரிவித்தார். அதற்கு காரணமாக தீபிகா நல்ல சமைக்க கூடியவர். அவரது சமையலை சாப்பிட மிகவும் ஆவலாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.