×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கோபத்தில் அவசரப்பட்டு நடிக்க வந்துட்டேன்" இயக்குனர் அமீரின் கண் கலங்கிய பேட்டி.!

கோபத்தில் அவசரப்பட்டு நடிக்க வந்துட்டேன் இயக்குனர் அமீரின் கண் கலங்கிய பேட்டி.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த அமீர் முதன்முதலில் 2002 ஆம் ஆண்டு 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்கள் இயக்கிய அமீர், 2007 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரும் பெயர் பெற்று தந்தது. பருத்திவீரன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சனைகளால் இதன் பின்பு எந்த படங்களையும் இயக்கவில்லை.

இதனை அடுத்து இயக்குனர் அமீர் தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான மாறன், வடசென்னை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இது போன்ற நிலையில் சமீபத்தில் யூ ட்யூப் சேனலிற்கு பேட்டி அளித்த அமீர் "அவசரப்பட்டு கோபத்தில் நடிப்பதற்கு முடிவெடுத்து விட்டேன். எனக்கு படங்களை இயக்க தான் பிடிக்கும். கோபத்தில் எடுத்த முடிவால் இப்போது படங்களை இயக்க முடியவில்லை" என்று மனம் வருந்தி பேசியிருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Amir #actor #director #Kollywood #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story