வெள்ள நிவாரண பணிகளுக்காக பிரபல முன்னணி நடிகர் செய்த மாபெரும் உதவி! குவியும் பாராட்டுக்கள்!
Akshay donate 1 crore for flood rescue
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கன மழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இந்த வெள்ளபெருக்கில் சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தன. 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நிவாரண பணிகளுக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, அசாமின் இக்கட்டான இந்த சூழ்நிலையில், வெள்ள நிவாரணத்திற்காக நடிகர் அக்க்ஷய் குமார் தனது பங்களிப்பாக ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். இதன் மூலம் நீங்கள் அசாமின் உண்மையான நண்பனாக இருக்கிறீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362