திருமணமாகாமலே, தண்ணீரில் அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்த அஜித் படநடிகை! வைரலாகும் புகைப்படம்!
ajith movie actress gave birth to girl baby
பாலிவுட் சினிமாவில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், தேவ் என்டிங், கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கல்கி கோச்லின். இவர் நடிகை மட்டுமின்றி நாடகக் கலைஞர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர். கல்கி கோச்லின் தமிழில் எந்ததிரைப்படத்திலும் நடிக்காத நிலையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இவர் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுரங் கஷ்யப் என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் சில வருடங்களிலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர். அதனை தொடர்ந்து தனியாக வசித்து வந்த கல்கி கோச்லின் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார்.மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை கல்கி கோச்லின் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தைய் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் கல்கி கோச்லின் தண்ணீரில் அமர்ந்து தனது குழந்தையை பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படத்தையும், தனது பிரசவ அனுபவம் குறித்தும் அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362