கோமாளிங்க.. திருந்தவேமாட்டாங்க.! சர்ச்சையான நயன்- விக்கி குழந்தை விவகாரம்.! ஆதரவாக நடிகை வனிதா கூறியதை பார்த்தீர்களா!!
கோமாளிங்க.. திருந்தவேமாட்டாங்க.! சர்ச்சையான நயன்- விக்கி குழந்தை விவகாரம்.! ஆதரவாக நடிகை வனிதா கூறியதை பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் விக்னேஷ்சிவன் அண்மையில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 மாதத்தில் வாடகை தாய் மூலமாக குழந்தை பிறந்ததாகவும் விவாதங்கள் எழுந்தது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துவ பிரச்சினைகள் ஏதாவது இருப்பவர்கள் மட்டும்தான் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்ள முடியும். கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு அதுகுறித்து நிறைய தகவல்களை அறிவோம் என பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து நயன்-விக்கிக்கு வாழ்த்து கூறிய நடிகை வனிதா, பெற்றோரான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு எனது வாழ்த்துக்கள். பிறர் பேசுவதை கண்டு கொள்ளாதீர்கள். உங்களது ஒவ்வொரு நிமிடங்களையும் கொண்டாடுங்கள். குழந்தைகளை விட பெரிய விஷயம் வேறெதுவும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர், ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை அழிப்பவர்கள்தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சட்டம் தெரியும், மெடிக்கல் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும், டுவீட் போடறதும். திருந்தவேமாட்டாங்க. கடவுள் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என அவருக்கு தெரியும்" என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நெட்டிசன்கள் வனிதா கஸ்தூரிக்கு மறைமுக பதிலடி கொடுப்பதாக கூறி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362