×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரிலீசுக்கு முன்பே சோதனையை சந்தித்த சோழர்கள்.. பொன்னியின் செல்வனுக்காக சிக்கிக்கொண்ட திரிஷா, ஜெயம் ரவி.!

ரிலீசுக்கு முன்பே சோதனையை சந்தித்த சோழர்கள்.. பொன்னியின் செல்வனுக்காக செய்து சிக்கிக்கொண்ட திரிஷா, ஜெயம் ரவி.!

Advertisement

 

தமிழில் கடந்த ஆண்டு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, மணி ரத்தனத்தின் இயக்கத்தில் எடுக்கப்பட்டு, லைகா ப்ரொடெக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். 

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி, சர்வதேச அளவிலும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்தது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம். 

சோழர்களின் காலகட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்தீபன், கார்த்திக், சரத் குமார் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதியன்று வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், ப்ரமோஷனுக்காக நடிகை திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களின் பெயர்களை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் வைக்க முயற்சித்தனர்.

இந்த நடவடிக்கையை கண்காணித்த ட்விட்டர் குழுமம், இருவரின் புளூ டிக் உரிமையை பறித்து இருக்கிறது. அதனை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் தொழில்நுட்ப குழு ஈடுபட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trisha #Jayam ravi #Ponniyin selvan 2
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story