#ThunishaShrama: நடிகை துனிஷா சர்மா மரண விவகாரம்; லவ் ஜிகாத்தை ஏற்காததால் கொலை?.. நடிகையின் தாய் பரபரப்பு பேட்டி.!
#ThunishaShrama: நடிகை துனிஷா சர்மா மரண விவகாரம்; லவ் ஜிகாத்தை ஏற்காததால் கொலை?.. நடிகையின் தாய் பரபரப்பு பேட்டி.!
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்த இளம் நடிகை துனிஷா ஷர்மா (வயது 20), கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையின்படி தொலைக்காட்சி நடிகர் ஸீசன் மொகமத் கான் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்ட்ட நிலையில், அவரை கைது செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை துனிஷாவின் தாயார் வனிதா ஷர்மா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில், "எனது மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவு நோய் ஏதும் அவருக்கு இல்லை. ஸீசனுக்கு தண்டனை கிடைக்கும் வரையில் அமைதியாக இருக்கமாட்டேன். துனிஷா ஸீசனின் செல்போனை சோதனை செய்தபோது, அவர் துரோகம் செய்தது உறுதியானதால் துனிஷா அது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்க மறுத்த ஸீசன், மகளை அடித்துள்ளார். எனது மகள் இன்று என்னைவிட்டு சென்றுவிட்டார். நான் தனியாக இருக்கிறேன். ஸீசன் படப்பிடிப்பு தளத்தில் வைத்தே போதைப்பொருள் உபயோகம் செய்து வந்துள்ளார். எனது மகளுக்கு அவன் அதனை கொடுத்திருக்க வேண்டும்.
ஸீசன் மகளை இஸ்லாத்தை கடைபிடிக்க கூறி வற்புறுத்தி இருக்கிறார். சம்பவத்தன்று காலை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டதே இறுதி. அதன்பின்னர் நடந்தது என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஹிஜாப் அணியக்கூறி ஸீசன் துனிஷாவை கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஸீசன் துனிஷாவை அறையில் இருந்து அழைத்து சென்றாலும், ஆம்புலன்ஸை அழைக்கவில்லை. இது கொலையே" என தெரிவித்து இருக்கிறார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362