தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?

வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?

actress-seetha-complaint-jewel-theft-in-home Advertisement

தமிழ் சினிமாவில் ஆண் பாவம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சீதா. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவர் சின்னத்திரையில் களமிறங்கி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும்போதே நடிகரும், இயக்குனருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் அவர் தனது 43 வயதில் தொலைக்காட்சி நடிகர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார்.

             Seetha

தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் விருகம்பாக்கம், புஷ்பா காலணியில் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் தங்க நடிகையை காணவில்லை என விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீட்டில் பணியாற்றும் நபர்கள் உட்பட  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!

இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சூர்யா படத்தில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Seetha #complaint #jewel
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story