×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆயுத எழுத்து நாயகிக்கு காதலருடன் விரைவில் திருமணமா? உற்சாகத்துடன் அவரே வெளியிட்ட தகவல்!

Actress saranya talk about her love and marriage

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா. அதனைத் தொடர்ந்து அவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். மேலும் அவர் தற்போது விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை சரண்யா சமீபகாலமாக தனது காதலன் ராகுல் சுதர்சனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர்களது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டபோது, நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்த ஒரு தமிழ்பையனைதான் திருமணம் செய்வேன் என கூறி வந்தேன். அது உண்மையாகிவிட்டது.

நான் எவ்வாறு தமிழில் கவிதை, கட்டுரை என ஆர்வமாக உள்ளேனோ, அதனைப் போலவே ராகுலும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். அவர் சிறந்த பேச்சாளர். நண்பர்களாக இருந்த நாங்கள் சமீபத்தில்தான் எங்களது காதலை உலகிற்கு வெளிப்படுத்தினோம். மேலும் எனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து அவ்வப்போது பதிவிட்டிருந்தேன்.

இந்த எதார்த்தத்தை  நன்கு புரிந்துகொண்டு மக்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல, திருமணம் எப்போது? எனவும் பலரும் கேட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களுக்கு காதலர்களாகவே பயணிக்க உள்ளோம். எங்கள் இரு வீட்டிலும் திருமணம் குறித்து பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு திருமணம் இருக்கும் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Saranya #Ayutha eluthu #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story