×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நல்ல நாட்களுக்கு நடுவில் சில கெட்ட நாட்களும் வந்தே தீரும்!.. போராடி மீண்டு வருவேன்: நடிகை சமந்தா உருக்கம்..!

நல்ல நாட்களுக்கு நடுவில் சில கெட்ட நாட்களும் வந்தே தீரும்!.. போராடி மீண்டு வருவேன்: நடிகை சமந்தா உருக்கம்..!

Advertisement

தற்போது ஏற்பட்டுள்ள உடல் நல பிரச்சினையில் இருந்து மீண்டு வருவேன் என்று கூறும் நடிகை சமந்தா. 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கு  சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. நடிகை சமந்தா தற்போது அவரது வீட்டிலேயே ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். 

விரைவில் தென் கொரியாவிற்கு, உயர் சிகிச்சைக்காக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா அளித்துள்ள பேட்டியில், எத்தனையோ போராட்டங்களில் ஜெயித்த நான் தற்போது ஏற்பட்டுள்ள உடல்நலம் குறித்த பிரச்சினையில் இருந்தும் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில நல்ல நாட்களும் இருக்கும், சில கெட்ட நாட்களும் இருக்கும். இதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என நான் பயந்த சந்தர்ப்பங்கள் எவ்வளவோ உள்ளது. ஒவ்வொரு நாளும், நிறைய பேருக்கு எத்தனையோ சவால்களுடன் போராட வேண்டி இருக்கும். நானும் அப்படித்தான் இருக்கிறேன். 

ஒரு முறை எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் அதை செய்தே தீருவேன். ஒரு கதாபாத்திரத்தில் உயிரை கொடுத்து நடிக்கும் பொழுது சொந்த குரலில் பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனவே தான் மருத்துவமனையில் இருந்த போதும்கூட டப்பிங் நானே பேசினேன் என்றார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress samantha #Myositis #samantha #Kollywood #Instagram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story