×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன்" மனம் திறந்த சதா.!

அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன் மனம் திறந்த சதா.!

Advertisement

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வரும் சதா, மராத்தியை தாய்மொழியாக கொண்டவர். இயக்குனர் தேஜா தெலுங்கில் இயக்கிய "ஜெயம்" திரைப்படம் மூலம் தான் சதா தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

அதன் பின்னர், இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய தமிழ் ஜெயம் படத்திலும் சதா தான் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அந்நியன் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் ப்ரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து சரியான வாய்ப்புகள் அமையாததால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சதா, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சதா, தெலுங்கு ஜெயம் படத்தில் நடித்த ஒரு காட்சிக்காக இன்றும் வேதனைப்படுவதாக கூறியுள்ளார்.

அதுகுறித்து சதா கூறியதாவது, "என்னுடைய கன்னத்தில் கோபிசந்த் அவருடைய நாக்கால் நக்குவது போன்று ஒரு காட்சி இருந்தது. இந்தக் காட்சி படத்திற்கு முக்கியம் என்று இயக்குனர் வற்புறுத்தினார். இதில் நடித்தபிறகு வீட்டிற்கு சென்று நீண்டநேரம் அழுதேன்" என்று சதா மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sadha #actress #cinema #Viral #controversy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story