×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"20வயதில் அட்ஜஸ்மெண்டிற்கு அழைத்தார்" சிவகார்த்திகேயன் பட நடிகை பகீர் தகவல்..

20வயதில் அட்ஜஸ்மெண்டிற்கு அழைத்தார் சிவகார்த்திகேயன் பட நடிகை பகீர் தகவல்..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரெஜினா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

மேலும் தமிழில் முதன்முதலாக 'கண்ட நாள் முதல்' திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து ரெஜினாவிற்கு பெயர் பெற்று தந்தது. இந்தப் படத்திற்கு பின்பு ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திர மௌலி, ராஜதந்திரம், மாநகரம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆனால் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் ரெஜினா.

இது போன்ற நிலையில், பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த ரஜினி, ஆரம்ப கால சினிமா துறையில் சந்தித்த சவால்களை பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியது, "ஒரு திரைப்படத்திற்கு வாய்ப்பு கேட்டு சென்றபோது படத்தின் தயாரிப்பாளர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார். அப்போது எனக்கு 20 வயது தான் அதைப் பற்றி புரியவில்லை. அதுவே முதல் முறை" என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#regina #actress #Kollywood #Siva #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story