×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படவாய்ப்புக்காக 42 வயது தமிழ் நடிகையை படுக்கைக்கு அழைக்கும் சிலர்; நடிகையின் காட்டமான பதில்.! 

படவாய்ப்புக்காக 42 வயது தமிழ் நடிகையை படுக்கைக்கு அழைக்கும் சிலர்; நடிகையின் காட்டமான பதில்.! 

Advertisement

 

திரைத்துறையில் நடிக்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் என்பது கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை இருந்துள்ளது. முன்பு திரைமறைவில் நடந்து வந்த பல கொடுமைகள் அனைத்தும், Me too-வுக்கு பின்னர் அம்பலமாகி பலரின் முகத்திரையை கிழித்தது. 

இதில் செல்வாக்கு படைத்தவர்கள் இன்று வரை எந்த விதமான பிரச்சனையையும் எதிர்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கவிஞர் என திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பெண்களை போகப்பொருளாக பயன்படுத்தி, பொதுவெளியில் தன்னை யோக்கியன் போல காண்பித்த பல சம்பவங்கள் மக்களுக்கு புரியவைத்தது. 

இந்நிலையில், தமிழ் மொழியில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர், திமிரு, சகுனி, ஆம்பள, முத்துன கத்தரிக்காய் உட்பட பல படங்களில் நடித்த நடிகை கிரண் ரத்தோட். 

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "திரைப்பட வாய்ப்பு தருகிறேன் என என்னை சிலர் படுக்கைக்கு அழைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். நான் படவாய்ப்புக்காக படுக்கையை பகிரும் பெண் அல்ல. நல்ல குடும்பத்தில் பிறந்தவள்" என கூறினார்.

தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியான படத்திலும் நடித்துள்ள நடிகை கிரணுக்கு தமிழில் ரசிகர்கள் ஏராளம். அவரின் கவர்ச்சிக்கு பலரும் ஏகபோக வரவேற்பை தெரிவித்து பின்னாளில் ரசிகராகினர். இதற்கிடையில், 42 வயது நடிகை தன்னை படுக்கைக்கு அழைப்பதாக கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #cinema news #Kiran Rathod #தமிழ் சினிமா #நடிகை கிரண் #பாலியல் தொல்லை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story