இரண்டு திருமணம் செய்துகொண்ட 37 வயது பிரபல நடிகை திடீரென தலையை மொட்டையடித்துக்கொண்ட சம்பவம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Actress jyothirmayi shaved her head photo goes viral
பிரபல நடிகை ஜோதிர்மயி திடீரென மொட்டை அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் வைரலாகிவருகிறது.
தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகு ண்டு முருகேசன் உள்ளிட்ட பலவேறு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஜோதிர்மயி. தமிழ் மட்டும் இல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் கடந்த 2004-ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 வருடங்கள் அவருடன் சேர்ந்து வாழந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார்.
பின்னர் சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான அமல் நீரத் என்பவரை நான்கு வருடங்கள் கழித்து கடந்த 2015-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஜோதிர்மயின் கணவர் அமல் நீரத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மனைவி ஜோதிர்மயியின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் ஜோதிர்மயி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறார். ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இருந்த ஜோதிர்மயி திடீரென மொட்டை அடித்துக்கொண்டது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக நடிகைகள் என்றாலே தஞல அழகில் அதிகம் கவனம் செலுத்தும் நிலையியல், ஜோதிர்மயி ஏன் மொட்டை அடித்துக்கொண்டார் என ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.