நடிகை கௌதமியின் கணவர் இவர்தானா? முதல்முறையாக வெளிவந்த அரிய புகைப்படம்!
Actress gownthami marriage photo viral
தமிழ் சினிமாவில் 1983 ஆம் ஆண்டு வெளியான வசந்தமே வருக என்னும் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்ததன்மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி.அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். பின்னர் தமிழில் குருசிஷ்யன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.மேலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடமும்பிடித்தார்.
நடிகை கௌதமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இந்நிலையில் அவர் சந்தீப் பாத்தியா என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமா துறையில் இருந்து விலகினார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில வருடங்களிலேயே பிரிந்தனர்.இந்நிலையில் கௌதமி தனது மகள் சுப்புலட்சுமியுடன் தனியாக வசித்து வந்தார்.
பின்னர் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் சரியாக கிடைக்காத நிலையில் அவர் சின்னத்திரை தொடர்களில் நடித்தார்.மேலும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றார். இதற்கிடையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கௌதமி கமல்ஹாசனுடன் 10 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். பின்னர் ஒரு சில காரணங்களால் இருவரும் விலகினர்.
இந்நிலையில் இதுவரை நடிகை கவுதமியின் முதல் கணவர் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது அவரது திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362