"அரைகுறை ஆடையில் நடித்தாலும் விஜயுடன் நடிப்பது மிகவும் பாதுகாப்பானது"நடிகை நெகிழ்ச்சி பேட்டி.!
அரைகுறை ஆடையில் நடித்தாலும் விஜயுடன் நடிப்பது மிகவும் பாதுகாப்பானதுநடிகை நெகிழ்ச்சி பேட்டி.!
2001ம் ஆண்டு "நீலா" என்ற கன்னடப் படத்தில் முதலில் அறிமுகமானவர் தான் காயத்ரி ஜெயராமன். தொடர்ந்து இவர் தமிழில் பிரபுதேவா நடித்த " மனதை திருடி விட்டாய்" படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
2005ம் ஆண்டு வரை மட்டுமே படங்களில் நடித்த இவர், பின்னர் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக இருந்தார். பின்னர் அந்தமானில் ஒரு ரிசார்ட்டில் பணியாற்றிய போது, ரிசார்ட் உரிமையாளர் சமீத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சின்னத்திரைக்கு வந்திருக்கும் காயத்ரி ஜெயராமன், வசீகரா படத்தில் தளபதி விஜயுடன் நடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, " சினிமாவில் எப்போதும் நடிகைகளுக்கு தொந்தரவு இருக்கும்.
சில நடிகர்களே நடிகைகளை தொந்தரவு செய்வார்கள். ஆனால் விஜயுடன் நடிக்கும்போது பாதுகாப்பாக இருக்கும். அரைகுறை ஆடையில் நடித்தாலும் அவரது பார்வை எப்போதும் தவறாக இருக்காது" என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்களும் "விஜய் ஒரு ஜென்டில்மேன் தான்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.