குவா.. குவா.. பிரபல சன்டிவி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்.. வைரல் விடியோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்..! குவியும் வாழ்த்துகள்..!!
குவா.. குவா.. பிரபல சன்டிவி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்.. வைரல் விடியோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்..! குவியும் வாழ்த்துகள்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த "கேளடி கண்மணி" என்ற தொடரில் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இதற்குப் பின் இவர் மகராசி தொடரிலும் நடித்து பிரபலமானார். பல தொடர்களிலும் நடித்த திவ்யா ஸ்ரீதர், கேளடி கண்மணி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த அட்னவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவரது திருமணத்திற்கு சீரியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அர்னவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த திவ்யா ஸ்ரீதர், "2017 ஆம் ஆண்டிலிருந்து கேளடி கண்மணி தொடர் மூலம் எங்களது அழகான பயணம் தொடங்கியது.
நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம். இப்பொழுது வரை அந்த புரிதல் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. 5 வருடம் ஒன்றாக இருந்து அன்பு, கவனிப்பு, சண்டைகள், விவாதங்கள் இருந்தாலும் நாங்கள் அதிர்ஷ்டமுள்ள ஜோடிகள்தான் என்று நினைக்கிறேன்.
இரண்டு முறைப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். பலரும் எங்களை ஆசீர்வதித்தனர். எங்களின் கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைத்து வாழ்க்கையில் பெரிய இலக்கை அடைந்தோம். விரைவில் எங்கள் குழந்தையை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம். கணவன் மனைவியாக, பெற்றோர்களாக அன்புடன் இதனை கடைபிடிப்போம்.
எனக்கும், என் குடும்பத்திற்கும் நீங்கள் அளித்த அளவில்லாத அன்பிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி. இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் திவ்யா ஸ்ரீதர் - அர்னவ் தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362