பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய நடிகை தீபிகா படுகோனே.! என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!!
நடிகை தீபிகா படுகோன் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஸ்பிரிட் படத்தில் ஹீரோயினாக கமிட்டான நிலையில் திடீரென விலகியுள்ளார்.

சினிமாதுறையில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் கல்கி 2898 திரைப்படத்தை தொடர்ந்து ஸ்பிரிட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். படத்தில் ஹீரோயினாக நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஸ்ப்ரிட் படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோனே
ஆனால் அவர் திடீரென்று ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகியுள்ளார். நடிகை தீபிகா படுகோனேவிற்கு கடந்த ஆண்டுதான் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் படப்பிடிப்பிற்கு வர பல கண்டிஷன்களை போட்டுள்ளாராம். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே ஷூட்டிங்கிற்கு வருவேன், 100 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நீடித்தால், ஒவ்வொரு நாளிற்கும் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாமன் திரைப்படம் ஹிட் ஆனதும் நடிகர் சூரி எங்கே சென்று உள்ளார் பாருங்க! வைரலாகும் வீடியோ காட்சி....
அவருக்கு பதில் இந்த நடிகையா??
இந்நிலையிலேயே படக்குழு அவரை ஸ்பிரிட் படத்தில் இருந்து நிக்கியுள்ளனராம். மேலும் அவருக்கு பதில் நடிக்க தமிழில், 'மதராஸி' மற்றும் 'ஏஸ்' போன்ற படங்களில் நடித்துள்ள ருக்மணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??