100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் எப்படி? பிக்பாஸ் சில்மிஷத்தை போட்டுடைத்த பிரபல நடிகை!!
actress complaint on bigboss telungu
தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 தற்பொழுது மிகவும் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. அதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தமிழைப் போலவே தெலுங்கு தொலைக்காட்சியிலும் பிக்பாஸ் சீசன் 3 விரைவில் தொடங்க உள்ளது.மேலும் இதில் பிக்பாஸ் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். அவரை தொடர்ந்து இரண்டாவது சீசனை நடிகர் நானி சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்பொழுது தொடங்கவிருக்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசனை நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் பங்குபெற பலரும் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ரசிகர்களும் பெருமளவில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை காயத்ரி குப்தா விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் நடிகை காயத்ரி குப்தா பிக்பாஸ் நிர்வாகத்தின் மீது பரபரப்பு போலீஸ் புகார் அளித்துள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இரண்டரை மாதங்களுக்கு முன்பே பிக்பாஸ் நிர்வாகத்தினர் என்னிடம் ஒப்பந்தம் போட்டார்கள். அதனால் நான் புதிய வாய்ப்புகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்னிடம் பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் இல்லாமல் வாழ முடியுமா என இரட்டை அர்த்தத்தில் கேட்டனர். மேலும் டிஆர்பிக்கு உத்தரவாதம் தரவில்லை என்றால் உங்களை ஏன் நாங்கள் தேர்வு செய்ய வேண்டும் என ஸ்டார் எம்ஏஏ நிர்வாகிகள் என்னிடம் கேள்வி எழுப்பினர். மேலும் தற்போது என்னிடம் போட்ட ஒப்பந்தத்தையும் திரும்பப் பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362