அட.. நீங்களா இப்படி?.. பிரபல நடிகை வீட்டில் கொடிக்கணக்கில் சிக்கிய பணம்..! அதிர்ந்துபோன ரசிகர்கள்..!!
அட.. நீங்களா இப்படி?.. பிரபல நடிகை வீட்டில் கொடிக்கணக்கில் சிக்கிய பணம்..! அதிர்ந்துபோன ரசிகர்கள்..!!
நடிகை அபிர்தா முகர்ஜி கடந்த 2004 ஆம் ஆண்டு மாடலாக தன் வாழ்க்கையை துவங்கினார். இதன்பின் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கியது. நடிகை அபிர்தா தனது தந்தையின் மரணத்திற்கு பின் தொழிலதிபரை திருமணம் செய்த நிலையில், அந்த நபர் யார் என்று இதுவரையிலும் தெரியவில்லை.
இவர் கிட்டத்தட்ட 6 மொழி படங்களில் நடித்துள்ளார். பெங்காலி படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்ததை தொடர்ந்து, கடந்த 2012 ஆம் ஆண்டு தெலுங்கு துறையில் நடித்து அங்கேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆசிரியர் ஊழியர்கள் நியமிப்பதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் ஜூலை 23ஆம் தேதி காலை மேற்குவங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி ஊழல் செய்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவருடன் நெருங்கி பழகிய நடிகை அபிர்தா முகர்ஜியின் வீட்டில் சோதனை செய்தபோது, கிட்டத்தட்ட ரூ.21.2 கோடி ரொக்கம், 79 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், 54 லட்சம் வெளிநாட்டு பணம் மற்றும் 22 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்ததுடன் நடிகை அபிர்தாவிடம் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.