×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இயக்குனர்கள் என்னை அதற்காக மட்டும்தான் அழைக்கிறாங்க! விஜய், அஜித் பட நடிகை வேதனை!

Actress akshara gowda feel about act in glamour scenes

Advertisement

தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த உயர்திரு 420 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்  பெங்களூரை சேர்ந்த மாடலான நடிகை அக்ஷரா கவுடா. அதனை தொடர்ந்து அவர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு திரை, போகன்,சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் மற்றும் கவர்ச்சி பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

மேலும் தற்போது கார்த்திக் ராஜு இயக்கத்தில் சூர்ப்பணகை என்ற படத்தில் ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அக்ஷரா கவுடா எப்பொழுதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஆரம்பத்தில் படங்களில்  கவர்ச்சியாக நடித்ததால், தற்போதும் அதைப்போல்  கவர்ச்சியாக நடிக்கவே அழைக்கின்றனர். மேலும் கவர்ச்சியான ஒற்றை ஐட்டம் பாடலுக்கு  நடனமாடவும் அணுகுகின்றனர். இந்நிலையில்  தற்போது சூர்ப்பனகை படத்தில் நடிக்கிறேன். இப்படத்தின் இயக்குனர் என் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளது மகிழ்ச்சி. இந்த படம் என்னை குறித்த எண்ணங்களை மாற்றும் என நம்புகிறேன் என்று  கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Akshara gowda #glamour
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story